சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுனர்

சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுனர்
சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுனர்

சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் போடி அருகே குச்சனூர் துரைசாமிபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்க பரமானந்தம ;(25). ஆட்டோ ஓட்டுனரான இவர், 16 வயது சிறுமியை கடந்தாண்டு மே மாதம் கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போடி மகளிர் காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதில், சிறுமியின் பெற்றோர் அவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதயைடுத்து சிறுமியின் கணவர் தங்க பரமானந்தமனை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com