ஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து

ஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து
ஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து

கும்பகோணம் அருகே, ஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளர் உள்ளிட்ட இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் ஜெஹபர் அலி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதன் அருகில் ஹபிபுல்லா என்பவர் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார். நேற்று இரவு ஜெஹபர் அலியின் ஹோட்டலுக்கு வந்த 4 பேர் சாப்பிட வந்தனர். நன்றாகச் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். அவர்களை மறித்து ஜெஹபர் அலி பணம் கேட்டார். அப்போது தகராறு ஏற்பட்டது. பின்னர் திடீரென்று அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெஹபர் அலியை குத்தினர். இதனை தட்டிக் கேட்க வந்த ஹபிபுல்லாவுக்கும் கத்திக் குத்து விழுந்தது. குத்திவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

அங்கிருந்தவர்கள் ஜெஹபர் அலியையும், ஹபிபுல்லாவையும் ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சோழபுரத்தில் சமூக விரோதிகளின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளதைக் கண்டித்து வணிகர் சங்கத்தினர், அங்கு இன்றும் நாளையும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் இவர்களை கத்தியால் தாக்கிய சிவானந்தன், விஷ்ணுப்ரியன், மணி, சூர்யா ஆகிய 4 பேரை திருப்பனந்தாள் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com