சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்து பரப்பியவர் உட்பட 5 பேர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்து பரப்பியவர் உட்பட 5 பேர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்து பரப்பியவர் உட்பட 5 பேர் கைது
Published on

திருவள்ளூரில் 8 வயது சிறுமியை கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே எருமைவெட்டிபாளையம் பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இங்கு தாய் தந்தையை இழந்து தனது தாத்தா, அத்தையுடன் 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 8 வயது சிறுமியை 75 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ பகிரப்படுவதாக சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் அத்தை கம்சலா என்பவர் சோழவரம் மற்றும் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஜோதிலட்சுமி வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ யாரிடமிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற கோணத்தில்; விசாரணை மேற்கொண்டார். அதில், எருமைவெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அந்த வீடியோவை எடுத்து பகிர்ந்ததாக தெரிய வந்தது. கண்ணனை கைது செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கண்ணனுக்கு தெரிந்த நபர்களான விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோவை பகிர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சோழவரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் 75 வயது மதிக்கத்தக்க பாலு என்ற முதியவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் தமக்கு தெரிந்த நபர்களுக்கு பகிர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com