நள்ளிரவில் மினி பேருந்தை கொளுத்திய மர்ம நபர்கள்

நள்ளிரவில் மினி பேருந்தை கொளுத்திய மர்ம நபர்கள்

நள்ளிரவில் மினி பேருந்தை கொளுத்திய மர்ம நபர்கள்
Published on

மயிலாடுதுறையில் மர்ம நபர்கள் சிலர், வீட்டின் முன்பு நின்றுக்கொண்டிருந்த மினி பேருந்தை தீ வைத்து எரித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. 

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், செந்தில் என்பவர் தனக்கு சொந்தமான மினி பேருந்தை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர், அவரின் பேருந்திற்கு தீ வைத்தனர். வேகமாக பரவி தீ பேருந்தை முற்றிலுமாக எரித்தது. இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த செந்தில் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து தீயில் கருகியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் பேருந்திற்குள் சென்று தீ வைத்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com