சென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது

சென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது
சென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது

சென்னையில் 17 வயது சிறுமியை கற்பழித்து கர்மாக்கிய 32 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை அண்ணாசாலையில் கவின்புறத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார்.  இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் விஜயகுமாரின் சகோதரி வீட்டில் வேலைப்பார்த்து வந்த 17 வயது சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து மருத்துவர்கள் சிறுமியை சோதனை செய்தபோது அவள் கற்பமாகியுள்ளது தெரியவந்தது. இதைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைதொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, விஜயகுமார் குடிபோதையில் தன்னை கற்பழித்துவிட்டதாகவும் அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு இணையதளத்தின் பதிவிட்டு விடுவேன் எனத் தொடர்ந்து தன்னை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்ததாகவும் தெரிவித்தார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் விஜயகுமாரின் வீட்டிற்கு சென்று சரமாரியாக அவரை தாக்கியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விஜயகுமார் தவறை ஒப்புக்கொண்டதால் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com