நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு
நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவிபெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் திசையன்விளை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் ஜெபா நெருக்கமாக பழக முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும் தங்களிடமும் தலைமையாசிரியர் பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி சாட் செய்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதையடுத்து திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசன் மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் தலைமை ஆசிரியர் ஜெபாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலைமையாசிரியரும் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com