சென்னை: பொருட்கள் கேட்டு தராததால் பேக்கரி உரிமையாளரை தாக்கிய கும்பல்

சென்னை: பொருட்கள் கேட்டு தராததால் பேக்கரி உரிமையாளரை தாக்கிய கும்பல்
சென்னை: பொருட்கள் கேட்டு தராததால் பேக்கரி உரிமையாளரை தாக்கிய கும்பல்

சென்னை அருகே, பொருட்கள் தராமல் பேக்கரியை மூடியதால் உரிமையாளர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் முருகன் (45). இவர் நேற்றிரவு கடையை மூடிக்கொண்டிருந்தபோது பொருட்கள் வாங்க நான்கு பேர் கடைக்கு வந்துள்ளனர். புத்தாண்டு என்பதால் 10 மணிக்குள்ளாக கடையை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்த நிலையில் பொருட்கள் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு இளைஞர்களும் கடையை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளர் முருகன் மற்றும் அவரது சகோதரரை அடித்து கற்களை கொண்டு வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் உயிருக்கு பயந்து இருவரும் கடைக்குள் சென்று ஷட்டரை மூடிக்கொண்டனர். பின்னர் அதிகாலையில் வந்த அந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி மூடியிருந்த கடையை கொளுத்தி விட்டு சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிசிவியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து காயத்திற்கு சிகிச்சை பெற்ற முருகன் சேலையூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார், அராஜக கும்பலை தேடி வந்த நிலையில் நான்குபேரும் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com