கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டதுடன் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 400-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகர் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே சிலர் கணினி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் என்பவர் தலைமையில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள், 400-க்கு அதிகமான சிம் கார்டுகள், விலையுயர்ந்த கார், இரு சக்கர வாகனங்கள், கணினி, 20 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பல் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் வெற்றி பெறவே முடியாதபடி புரோகிராம் செய்யப்பட்ட செயலி மூலம் இவர்கள் அப்பாவிகளை ஏமாற்றி வந்ததாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com