இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள், 400-க்கு அதிகமான சிம் கார்டுகள், விலையுயர்ந்த கார், இரு சக்கர வாகனங்கள், கணினி, 20 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பல் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் வெற்றி பெறவே முடியாதபடி புரோகிராம் செய்யப்பட்ட செயலி மூலம் இவர்கள் அப்பாவிகளை ஏமாற்றி வந்ததாகவும் தெரிகிறது.