பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விமானப்படை விசாரணைக்கு மாற்றம்

பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விமானப்படை விசாரணைக்கு மாற்றம்

பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விமானப்படை விசாரணைக்கு மாற்றம்
Published on
கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை சக அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கு விமானப்படை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அதிகாரியை, லெப்டினன்ட் அமித்தேஷ் ஹர்முக் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் அவரை கோவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக தனது புகார் குறித்து விமானப்படை அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அமித்தேஷ் ஹர்முக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்திய விமானப்படை சட்டத்தின்படி இந்த வழக்கை விமானப்படை விசாரணைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து லெப்டினன்ட் அமித்தேஷ் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com