ஆவணங்கள் இல்லாத ஏலக்காய் மூட்டைகள் - பறிமுதல் செய்த போலீஸ்

ஆவணங்கள் இல்லாத ஏலக்காய் மூட்டைகள் - பறிமுதல் செய்த போலீஸ்

ஆவணங்கள் இல்லாத ஏலக்காய் மூட்டைகள் - பறிமுதல் செய்த போலீஸ்
Published on

எவ்வித ஆவணங்களும் இன்றி கேரளாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ஏலக்காய் மூடைகள் பிடிபட்டது.

தேனி மாவட்டம் போடி முந்தல் சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து போடிமெட்டு வழியாக 2ஜீப் மற்றும் 1காரில் எவ்வித ஆவணங்களுமின்றி கடத்தி வரப்பட்ட 10 மூட்டை ஏலக்காய்களை முந்தல் சோதனைச் சாவடியில் உள்ள காவல்துறையினர் பறிமுதல் செய்து போடி நகர் காவல்நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக 2ஜீப் மற்றும் 1காரில் எவ்வித ஆவணங்களும் இன்றி கடத்தி வரப்பட்ட 10 ஏலக்காய் மூடைகளை முந்தல் சோதனை சாவடியில் உள்ள காவல்துறையினர் பிடித்து நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த 3 வாகனங்களையும் சஞ்சீவி வனராஜ் ராஜசேகர் என்ற 3பேர் ஓட்டி வந்துள்ளனர். அவர்களை பிடித்த காவல்துறையினர் 3வாகனங்களையும் பறிமுதல் செய்ததோடு அவர்களையும் விசாரணை செய்து வருகின்றனர். பிடிப்பட்ட 10ஏலக்காய் மூடைகள் 600கிலோ என்றும் இதன் மதிப்பு 6லட்சம் என்றும் தெரிய வருகிறது. இது போன்று இரவு நேரங்களில் ஏலக்காயை எவ்வித ஆவணங்களுமின்றி கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com