தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கொலை - இருவர் கைது

தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கொலை - இருவர் கைது
தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கொலை - இருவர் கைது

தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

கோபால் (55) என்பவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உறவினர்களிடம் சிறுமி தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த சிறுமியின் தாய்மாமன் மாரிபாண்டி என்பவர் கல்லால் கோபாலின் தலையில் போட்டுள்ளார். இதில், கோபால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் தாய்மாமன் மாரிபாண்டி உள்ளிட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com