தென்காசி: கொய்யாத் தோப்பில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம் - போலீசார் விசாரணை

தென்காசி: கொய்யாத் தோப்பில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம் - போலீசார் விசாரணை
தென்காசி: கொய்யாத் தோப்பில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம் - போலீசார் விசாரணை

பூலாங்குளம் கிராமத்தில் பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கொய்யாத் தோப்பில் வீசப்பட்ட சடலம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கரில் கொய்யாத் தோப்பு உள்ளது. இவரது தோப்பில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிளாஸ்டிக் சாக்கில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது.

இதைத் தொடர்ந்து ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 40 வயது இருக்கும். கொலையுண்ட பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் அவரது பெயர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் விசாரணை நடத்தினார். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com