வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(29). இவர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பிரிவில் தற்காலிக ஊழியராக (தொகுப்பூதியம்) பணியாற்றி வருகிறார். இவர் தினம் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி இவர் வரும் வண்டியை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு அருகில் நிறுத்திவிட்டு அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 10.00 மணிக்கு பணிக்கு வந்தவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை தபால் நிலையம் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.