டெல்லியின் பதர்பூர் பகுதியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பகுதிக்கு செல்லும் தனியார் இரட்டை அடுக்கு ஏசி பேருந்து ஒன்று, கடந்த திங்கள்கிழமை அன்று இரவு 11 அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பதர்பூரிலிருந்து கிளம்பியது. இப்பேருந்தில் 30 வயது பெண் ஒருவர் தனது 14 வயது மகள் மற்றும் அவரது சகோதரியின் 18 வயது மகளுடன் பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது பேருந்து ஊழியர்களான பப்லு மற்றும் அன்ஷு ஆகிய இருவரும், அப்பெண்ணின் மகளிடம் கேபினில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிகிறது.