ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை: 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் சிக்கினர்

ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை: 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் சிக்கினர்
ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை: 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் சிக்கினர்

கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகளை கைது செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் முதல் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகள் அடங்குவர். சிலர் பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் ஆவார். 110 ரவுடிகள் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைச்சாலையில் அடைக்கபட்டனர்.  பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள், காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள். இவர்கள் மீது நன்னடத்தை உறுதி மொழி பெறப்பட்டது. அதை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதக்காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இதையும் படிக்க: வாங்கிய கடனை வட்டியோடு செலுத்திய பிறகும் பணம் கேட்டு மிரட்டுறாங்க – புகாரில் ஒருவர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com