'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!

'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!

சென்னை பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த ஐ.டி ஊழியர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர்கள் சுவற்றில் ஒட்டிவைத்திருந்த தற்கொலை கடிதம் காண்போரை கலங்கவைத்துள்ளது.

சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ் (வயது 41). இவரது மனைவி காயத்திரி (வயது 39), இவர் பாஜகவில பொழிச்சலூரில் மண்டல மகளிரணி செயலாளராக உள்ளார். இத்தம்பதிக்கு 9வது படிக்கும் மகள் நித்யஸ்ரீ (வயது 13), 2வது படிக்கும் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 8) என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் தந்தை பிரகாஷ், நேற்றைய தினம் காலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இவர்களில் காயத்திரியின் தந்தை தனது மகள் வீட்டுக்கு நேற்று காலை எதார்த்தமாக சென்றபோது, அங்கு அனைவரும் இறந்து கிடந்ததை கண்டிருந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் அவர். அதன் பேரில் சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கைரேகையை பதிவு செய்ய கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கைரேகையை பதிவு செய்தனர். பின் தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், அவர்கள் வீட்டுச் சுவற்றில், இவர்களின் தற்கொலை கடிதமொன்று இருந்துள்ளது. அதில், ‘யாருக்கு இது கவலையாக இருந்தாலும், அவர்களுக்கு சொல்ல விரும்புகிறோம். இது நானும் என் மனைவியும் இணைந்து எடுத்த முடிவு. இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல’ (To whom so ever it may concern This is our me and my wife combined decision and no one is responsible for this act) என்று எழுதியுள்ளனர்.

கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிகிக்கும் நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார். அவர் பேசுகையில், “கடிதம் எழுதி வைத்து விட்டு சுவற்றில் ஒட்டி விட்டு இறந்திருக்கிறார்கள். அதில் ஒன்றாக சேர்ந்து முழுவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்காக, புதி எலக்ட்ரிக் ரம்பத்தை அமேசானில் வாங்கியுள்ளனர். கடந்த 19ம் தேதி அது இவர்களுக்கு டெலிவரி ஆகியுள்ளது. தொடர்ந்து அவர்களிடமிர்நுது செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, மிரட்டல் இருக்கிறதா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். 3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் அவர்கள் வீட்டிலிருந்து கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட புலன் விசாரணையில், முந்தைய நாள் இரவு 11 மணிக்கு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரியவந்திருக்கிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சரியான நேரம் தெரியவரும் என்றும் மயக்க மருந்துகள் உட்கொண்டு பின்னர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடவியல் துறையினர் ஆய்விற்கு பின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குரோம்பேட்டையில் அனைவரது உடலும் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com