சென்னை கவின் கல்லூரி மாணவர் தற்கொலை: துறைத்தலைவர் மீது புகார்

சென்னை கவின் கல்லூரி மாணவர் தற்கொலை: துறைத்தலைவர் மீது புகார்

சென்னை கவின் கல்லூரி மாணவர் தற்கொலை: துறைத்தலைவர் மீது புகார்
Published on

சென்னை கவின் கல்லூரியை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துறைத் தலைவரின் மறைமுக தொந்தரவால்தான் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

செராமிக் துறையில் நான்காம் ஆண்டு படித்து வந்த பிரகாஷ் நேற்று தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மூன்று பக்க கடிதத்தை அவர் எழுதி தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், வீடியோ பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் எழுதியுள்ள கடிதத்தில, தனது துறைத் தலைவர் மறைமுகமாக பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்ததாகவும், அதனை தான் வெளிப்படையாக கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டு, கல்லூரி முதல்வர் வரை சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் தன்னை கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்க விடமாட்டார்கள் என்றும் தன்னுடைய கனவு நினைவேறாது என்பதால் தற்கொலை முடிவு எடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். 

மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது அக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com