ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா (45) இவர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியொன்றில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில்குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com