திண்டுக்கல்: சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

திண்டுக்கல்: சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
திண்டுக்கல்: சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தை, சகோதரரை இளையமகன் அரிவாளால் வெட்டும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

தவசிமடையைச் சேர்ந்த தந்தை ஒருவருக்கு தனது சொத்துகளை மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுப்பத்தில் தகராறு இருந்திருக்கிறது. இதில் இளையமகன் லூர்துராஜ் அடிக்கடி தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மோதல் உண்டானபோது மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை லூர்துராஜ் வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த தாய் மற்றும் சகோதரரையும் அரிவாளால் தாக்கிய அவர், கிராம மக்கள் வருவதை கண்டு தப்பியோடினார். அரிவாள் வெட்டில் காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய லூர்துராஜை காவல்துறையினர் தேடி வருகிறனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com