அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையையே கொலைசெய்த மகன் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையையே கொலைசெய்த மகன் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையையே கொலைசெய்த மகன் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு மகனே மதுவில் குருணை மருந்தை கலந்து கொடுத்து நண்பருடன் இணைந்து தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா(60) என்பவர் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தநிலையில் இம்மாத இறுதியில் பணி ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 18ஆம் தேதி அதே பேரூராட்சி அலுவலகம் அருகே மது போதையில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய கீரனூர் போலீசார் அவர் உயிர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்துவந்த நிலையில், அவர் விஷம் குடித்ததும், மேலும் தாக்கப்பட்டு இருந்ததும் உடற்கூராய்வில் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கூடுதல் விசாரணை மேற்கொண்டதில் கருப்பையா ஓய்வுபெற உள்ள நிலையில் அவர் பணிபுரிந்த அரசு பணியான துப்புரவு பணியை தான் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசையில் அவரது மகன் பழனி மற்றும் அவரது நண்பரான கீரனூர் அருகே உள்ள ஈச்சங்காட்டை சேர்ந்த ஆனந்தன் ஆகிய இருவரும் இணைந்து கருப்பையாவுக்கு மதுவில் குருணை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து அதைக் குடித்த கருப்பையா உயிருக்குப் போராடிய நிலையில் அவரது நெஞ்சின் மீது ஏறி மிதித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றது விசாரணையில் தெரியவந்ததையடுத்து போலீசார் கருப்பையாவின் மகனான பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தந்தையின் அரசுப் பணியை தான் பெறவேண்டும் என்பதற்காக பெற்ற தந்தை என்று பாராமல் நண்பருடன் சேர்ந்து கொலைசெய்த மகனின் கொடூரசெயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com