சிவகாசி: சொத்துத் தகராறில் அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்

சிவகாசி: சொத்துத் தகராறில் அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்

சிவகாசி: சொத்துத் தகராறில் அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

சிவகாசி அருகே சொத்துத் தகராறு காரணமாக தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய உடன் பிறந்த சகோதரர்களும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

அண்ணன் தம்பிகளுக்கு இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், காவல்துறை தற்காலிகமாக சமாதானப்படுத்தி அனுப்பியது.

இந்நிலையில் சொத்து பிரச்னை குறித்து பேசுவதற்காக முக்தீஸ்வரன் மணிகண்டன் விநாயகமூர்த்தி ஆகியோர் முருகன் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பம் முதல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் முருகனின் மனைவி இந்திரா தேவி, மாமியார் பெரியத்தாய் முக்தீஸ்வரன், மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகியோர் காயமடைந்த நிலையில், மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கள் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனின் மூத்த சகோதரர் முக்தீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விநாயகமூர்த்தி மற்றும் சிலரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com