வாட்ச்மேனுக்கு அரிவாள் வெட்டு! ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!

வாட்ச்மேனுக்கு அரிவாள் வெட்டு! ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!
வாட்ச்மேனுக்கு அரிவாள் வெட்டு! ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!

சிவகங்கை மாவட்டத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் ஒன்றில் வாட்ச்மேனை அரிவாளால் வெட்டிவிட்டு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அருகே அடுத்தடுத்து இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 7674 என்ற எண்ணுள்ள கடையில் முத்துக்குமார் என்பவர் கண்காணிப்பாளராகவும் பாலாஜி என்பவர் உள்ளிட்ட 4 பேர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். வாட்ச்மேனாக 60 வயதான தீர்த்தம் என்பவர் பணியாற்றி வந்தார்.

நேற்று நள்ளிரவு வேனில் வந்த மர்ம நபர்கள் வாட்ச்மேன் தீர்த்தத்தை கட்டிப் போட்டு விட்டு அரிவாளால் வெட்டியதுடன் கடையில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்ளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்த வாட்ச்மேன் தீர்த்தத்தை பார்த்து திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வாட்ச்மேன் தீர்த்தம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் மானாமதுரை டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே இதே கடையில் 2018 ஆம் ஆண்டு விற்பனையாளர் பாலாஜி என்பவரை வெட்டி விட்டு மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதன்பின்னர்தான் பாதுகாப்புக்காக தீர்த்தம் (60) என்பவரை வாட்ச்மேனாக நியமித்துள்ளனர். தற்போது வாட்ச்மேனையும் வெட்டிவிட்டு கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com