இருட்டில் வைத்து சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: இளைஞருக்கு தர்மஅடி
இருட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் கணிணி உள்ளிட்ட உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் பாலாஜி. வயது 27. இவர் நேற்று தனது பணியினை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அந்த நேரத்தில் சிறுமி நந்தினி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். நந்தினையை பார்த்த பாலாஜி, அவரை அங்கிருந்த இருட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுமியும் ஏமாந்து சென்றுவிட இருட்டினில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார் பாலாஜி. இதனால் சிறுமி அலறல் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பாலாஜியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
சிறுமி நந்தினி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மடிப்பாக்கம் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்கள்: செய்தியாளர் S. சாந்தகுமார், புதிய தலைமுறை.