சென்னை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிக்கிய இளைஞர்
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம், காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 5 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்(30)
என்ற நபர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நேற்று காலை சிறுமி எழுந்தவுடன் பிறப்புறுப்பு வலிப்பதாக தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். தாய் மேற்கொண்டு விசாரித்தபோது, சிறுமிக்கு உதயகுமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் சிறுமியின் தாய் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் உதயகுமார் மீது போக்சோ
சட்டத்திம் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.