3 ஆண்டுகளாக பேத்திக்கு பாலியல் தொல்லை: தாத்தா போக்சோவில் கைது

3 ஆண்டுகளாக பேத்திக்கு பாலியல் தொல்லை: தாத்தா போக்சோவில் கைது
3 ஆண்டுகளாக பேத்திக்கு பாலியல் தொல்லை: தாத்தா போக்சோவில் கைது

தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி முனியாண்டி (70) என்பவர், தனது பேத்திக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கிராம மக்கள் பேசியுள்ளனர்.

இதையறிந்த கிராம நிர்வாக அதிகாரி விமல் இதுகுறித்து திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும் தற்போது கொரோனா காலம் என்பதால் அவர் வீட்டிலேயே இருக்கின்றார். மேலும் இவரது அம்மா இறந்து விட்டார். இவர் அப்பாவும் இவரை விட்டுச் சென்று விட்டதால் சிறுமியும் அவரது அண்ணனும் தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகி முனியாண்டி கடந்த சில வருடங்களாக சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி சிறுமிக்கு வயிற்றுவலி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிறு பெரிதாக இருந்ததை அடுத்து முனியாண்டி சிறுமியை மணம்பூண்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் கடந்த 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து அதிமுக நிர்வாகி முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு உதவியாக இருந்த ராஜாமணி மற்றும் இந்திராணியும் விசாரித்து வருகின்றார்கள். பல ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதிமுக நிர்வாகி முனியாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com