வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாட்டர் கேன் தொழிலாளி போக்சோவில் கைது

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாட்டர் கேன் தொழிலாளி போக்சோவில் கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாட்டர் கேன் தொழிலாளி போக்சோவில் கைது

காரைக்காலில் வாட்டர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாட்டர் கேன் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த நவாஸ்கான் என்பவர் தனியார் குடிநீர் வாட்டர் கேன் நிறுவனத்தில் வாட்டர் கேன் டெலிவரி மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாட்டர் கேன் டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து நகர காவல் நிலைய போலீசார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த நவாஸ்கானை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com