சிறுமிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அனைத்து மகளிர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த 11 வயது சிறுமியிடம், அவ்வழியாக சென்ற ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்ற சிறுமியிடம் வீட்டில் அம்மா, அப்பா இல்லையா என்று பேச்சுக் கொடுத்தவாறே பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அந்த நபர் வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து உடனே சிறுமி பயத்தில் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட அந்த நபர் தப்பியோடினார். இதை பார்த்த அப்பகுதியினர் தொலைபேசிமூலம் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் தரங்கம்பாடி தாலுகா பிள்ளைபெருமாநல்லுரை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் என்பதும், தற்காலிக ஆசிரியராக பணியில் இருந்தவர் வேலையை விட்டுவிட்டு டியூசன் வகுப்பு நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து, ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் வாத்தியார் கண்ணன் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ஆசிரியர் கண்ணனை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com