பாலியல் வழக்கு: அரசுக் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கு: அரசுக் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கு: அரசுக் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை

கரூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் - தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிய இளங்கோவன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 5 மாணவிகள் தனித்தனியே அளித்த புகார்களின் பேரில், 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதில், தீர்ப்பளித்த நீதிபதி கிறிஸ்டோபர், 5 வழக்குகளிலும் தனித்தனியாக இளங்கோவனுக்கு மொத்தம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com