நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்து.. காவலர் மகன் பரிதாப மரணம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்து.. காவலர் மகன் பரிதாப மரணம்.. வெளியான திடுக்கிடும் தகவல்
நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்து.. காவலர் மகன் பரிதாப மரணம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் தலைமை காவலர் சவுந்திர பாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (19) கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதி அறையில் இருந்த அஜய்குமார், திடீரென வாந்தி எடுத்து மயக்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்தை செலுத்திக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர் கவியரசு அடங்கிய போலீசார் அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சக மாணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்தியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரபடுத்திய போலீசார் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில் கும்பகோணத்தில் மருந்தகம் நடத்திவரும் முகமது பசீர் என்பவர் ஆன்லைன் மூலமாக மருத்துவரின் பரிந்துரையின்றி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் கவியரசு தலைமையில் கும்பகோணம் சென்ற தனிப்படை போலீசார், முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com