இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயிர் உள்ள கடல் அட்டைகளையும் கடத்தல்காரர் ஒருவரையும் மண்டபம் மெரைன் போலீஸார் கைது செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கடல் அட்டைகளைக் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டபம் மெரைன் போலீஸார் நடுக்கடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டு படகில் சோதனை செய்தபோது, 300 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டுபடகு மற்றும் கடத்தலில் ஈடுபட்ட அலி என்பவரையும் கைது செய்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கடல் அட்டைகளை மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் பத்து லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிராந்தியங்களின் வழியாக ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பையும் மீறி இலங்கைக்கு கடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com