பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

செஞ்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த (நீலாம்பூண்டி) கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் (26) என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பள்ளி மாணவி தன்னுடைய பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் பெற்றோர்கள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com