`என் அம்மாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்’- முதியவர் கொலையில் கைதான பள்ளி மாணவர்

`என் அம்மாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்’- முதியவர் கொலையில் கைதான பள்ளி மாணவர்
`என் அம்மாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்’- முதியவர் கொலையில் கைதான பள்ளி மாணவர்

செங்கல்பட்டில் தாயிடம் தவறாக நடந்து கொண்ட முதியவரை 12 ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ராமாபுரம் காட்டுப்பகுதியில் கன்னியப்பன் (வயது 60) என்ற முதியவர் கடந்த ஜூன் மாதம் 17 தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மாணவரிடம் விசாரணை செய்த போது, மாணவனின் தாயிடம் முதியவர் கன்னியப்பன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும், அதை தான் தட்டி கேட்க சென்றதாகவும் கூறியுள்ளார். அப்படி தட்டி கேட்ட மாணவனை முதியவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் அம்மாணவர் கல்லால் முதியவரை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com