உபியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சுட்டுக்கொலை

உபியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சுட்டுக்கொலை
உபியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சுட்டுக்கொலை

அடையாளம் தெரியாத நபர்களால் உத்தரப்பிரதேச ஆர்எஸ்எஸ் தொண்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தின் பிராமின்பூரை சேர்ந்தவர் 42 வயதாகும் ராஜேஷ் ஆர்எஸ்எஸ் தொண்டர், அவரது வீட்டின் அருகிலேயே ஒரு ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இன்று இவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேஷ் உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சுக்லா கூறும்போது, இன்று காலை ராஜேஷும் அவரது தம்பி அனிடேஷ் மிஷ்ராவும் நடைபயிற்சியை முடித்துவிட்டு, அவர்களது கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, அமர்ந்திருந்த இருவரையும் நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அதற்குள்ளாக தாக்குதல் நடத்திய 3 பேரும் தப்பிச் சென்றனர். 

படுகாயமடைந்த இருவரையும் ஊர் மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய மருத்துவரகள், அனிடேஷ் மிஷ்ரா மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர். அனிடேஷ் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கொலை முன் விரோதம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com