போலி நகைகளை அடகுவைத்து ரூ.22 லட்சம் மோசடி – பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது

போலி நகைகளை அடகுவைத்து ரூ.22 லட்சம் மோசடி – பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது
போலி நகைகளை அடகுவைத்து ரூ.22 லட்சம் மோசடி – பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது

தனியார் நகை அடகு கடையில் பணிபுரிந்த ஊழியர் கவரிங் நகைகளை அடகு வைத்து 22 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் மகள், தாய் மற்றும் கணவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பகுதியில் ஸ்ரீ விநாயகா பேங்கர்ஸ் என்ற பெயரில் துரை என்பவர் நகை அடகு கடையை நடத்தி வந்தார். அவர் நடத்திய நகை அடகு கடையில் சங்கீதா என்ற பெண் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அடகு கடையில் பணிபுரிந்த சங்கீதா கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகளை போன்று போலியான கவரிங் நகைகளை இவருடைய நண்பர்கள் பெயரில் அடகு வைத்து ரூ.22 லட்சத்தி 18 ஆயிரத்தி 500 பணத்தை கையாடல் செய்துள்ளார்.

அடகு கடையில் உரிமையாளர் துரை அடகு வைக்கப்பட்ட நகைகளை பரிசோதனை செய்தபோது 102 நபர்கள் பெயரில் அடகு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் போலியான கவரிங் நகைகள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து துரை பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அடகு கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் சங்கீதா மற்றும் அவரது கணவர் பிரசாந்த், சங்கீதாவின் தாய் ஜீவா, சங்கீதாவின் நண்பர்களான யுவராஜ், கௌதம் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து நகை அடகு கடையில் போலியான கவரிங் நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சங்கீதா அவரது தாய் ஜீவா மற்றும் அவரது கணவர் பிரசாந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சங்கீதாவின் நண்பர்களான கௌதம், யுவராஜ் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com