ரவுடியின் முகத்தை கண்டந்துண்டமாக வெட்டிய கும்பல்: திடுக்கிடும் தாம்பரம்

ரவுடியின் முகத்தை கண்டந்துண்டமாக வெட்டிய கும்பல்: திடுக்கிடும் தாம்பரம்
ரவுடியின் முகத்தை கண்டந்துண்டமாக வெட்டிய கும்பல்: திடுக்கிடும் தாம்பரம்

முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு புறவழிச்சாலை ஓரமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக சோமங்கலம் காவல்துறையினருக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்தில் வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இவர் கொருக்குபேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்டாலின்(32) என தெரியவந்தது. இவர் மீது வண்டலூர், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி ஸ்டாலினை மர்ம நபர்கள் எங்கோ ஒரு இடத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு பின்னர் இந்தப் பகுதியில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்..? எதற்காக கொலை நடத்தப்பட்டது..? என சோமங்கலம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இதனிடையே, இந்த வெளிவட்ட சாலையில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் காவல்துறையினர் ரோந்து வருவதை அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். முதற்கட்ட தகவலின் படி முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com