சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை 

சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை 
சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை 

சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய உள்ளார். 

விழுப்புரம் பகுதியை சேர்ந்த ரவுடி மணிகண்டன் நேற்று சென்னையில் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவரைப் பிடிக்க செல்லும் போது காவல்துறை எஸ்.ஐ. பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  


இந்நிலையில் ரவுடி மணிகண்டனினால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா மணிகண்டன் கொல்லப்பட்ட இடம் மற்றும் அவரது உடலின் பிரேத பரிசோதனை ஆகியவற்றை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்  செய்யப்பட்ட வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com