போலீசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி

போலீசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி
போலீசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி

சென்னை திருவெற்றியூரில் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்று மாடியில் இருந்து குதித்த ரவுடி உயிரிழந்தார்.

பல்வேறு வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த மோகன்ராஜ், ஜோதி பாசு, ராசய்யா ஆகிய மூன்று பேர் திருவெற்றியூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், குடியிருப்புக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி அங்கு விரைந்த காவல்துறையினர் மூன்று பேரையும் சுற்றிவளைத்தனர். ஆனால் போலீசார் சுற்றி வளைப்பதை அறிந்த 3 பேரும் தப்பி ஓடினர்.

இதில் ஜோதி பாசு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். மோகன் ராஜ், ராசய்யா ஆகிய இருவரும் 3-வது மாடியில் இருந்து மரக்கிளைகளை பிடித்து கீழே குதித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மோகன்ராஜ் பிடி தவறி மேலே இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். ராசய்யா படுகாயத்துடன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மோகன்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்துபோன மோகன்ராஜ் மீது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. படுகாயமடைந்த ராசய்யா மீது காஞ்சிபுரம் திருப்போரூரில் கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பியோடிய ஜோதி பாசுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com