3000 பேரிடம் வசூல்..! ரூ.500 கோடி மோசடி - நிதிநிறுவன உரிமையாளர் கைது!

3000 பேரிடம் வசூல்..! ரூ.500 கோடி மோசடி - நிதிநிறுவன உரிமையாளர் கைது!
3000 பேரிடம் வசூல்..! ரூ.500 கோடி மோசடி - நிதிநிறுவன உரிமையாளர் கைது!

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வட்டி என ஆசை வார்த்தை கூறி மோசடி. 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது.

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வட்டி என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நிறுவன உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனர் உள்ளிட்ட மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆம்ரோ கிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மோசடி செய்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜராஜன், அவருடைய மனைவி முத்துலட்சுமி, அவருடைய மைத்துனர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com