சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது

சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது

சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது
Published on

நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 3,85,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற சுதாகர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2 பேர் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கோயம்பேடு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பூனை பிரகாஷ், நொளம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி கோயம்பேடு கீரை மார்க்கெட் பகுதியில் தனியார் நிறுவன கலெக்‌ஷன் ஏஜெண்டு ஊழியர் லோகேஷ் என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் வழிப்பறி செய்து 5 லட்சம் ரூபாய் பறித்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட பூனை பிரகாஷ் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்றவர் என்பதும் தெரிந்தது. மேலும் அவர் மீது கொடுங்கையூர், விருகம்பாக்கம், பெரவள்ளூர் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான மற்றொருவரான விஜய்குமார் 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்றதும் பல நகைப்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர்களது கூட்டாளியான விஜய், ராகுல், ராஜேஷ் ஆகியோரையும் கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் இருந்து 40 சவரன் தங்க நகைகள், 3,85,000 ரூபாய் பணத்தையும், 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை கும்பல் தலைவனான பன்னீர்செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com