’ஒரு போலீஸ் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்’-அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்

’ஒரு போலீஸ் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்’-அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்
’ஒரு போலீஸ் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்’-அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணியாகச் சென்றனர்.

அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், அதிமுக அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

2018 ஜூன் 4-ம் தேதி விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில், 6 மாதம் கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு வழங்கியது. கால அவகாசம் முடிவுற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன், தமிழ்நாடு முதலமைச்சரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்பித்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்படபோலீசார் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளதாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாராட்டுகிறோம்!<a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> <a href="https://twitter.com/c_sylendra?ref_src=twsrc%5Etfw">@c_sylendra</a> <a href="https://twitter.com/tnpoliceoffl?ref_src=twsrc%5Etfw">@tnpoliceoffl</a> <a href="https://twitter.com/PoliceTamilnadu?ref_src=twsrc%5Etfw">@PoliceTamilnadu</a> <a href="https://twitter.com/sdpitnhq?ref_src=twsrc%5Etfw">@sdpitnhq</a> <a href="https://twitter.com/jawahirullah_MH?ref_src=twsrc%5Etfw">@jawahirullah_MH</a> <a href="https://twitter.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@thirumaofficial</a> <a href="https://twitter.com/MDMKVaiko?ref_src=twsrc%5Etfw">@MDMKVaiko</a> <a href="https://twitter.com/mutharasancpi?ref_src=twsrc%5Etfw">@mutharasancpi</a> <a href="https://twitter.com/kbcpim?ref_src=twsrc%5Etfw">@kbcpim</a> <a href="https://twitter.com/VelmuruganTVK?ref_src=twsrc%5Etfw">@VelmuruganTVK</a> <a href="https://twitter.com/RealAravind36?ref_src=twsrc%5Etfw">@RealAravind36</a> <a href="https://twitter.com/karthickselvaa?ref_src=twsrc%5Etfw">@karthickselvaa</a> <a href="https://twitter.com/T_Thamizarasan?ref_src=twsrc%5Etfw">@T_Thamizarasan</a> <a href="https://twitter.com/mahajournalist?ref_src=twsrc%5Etfw">@mahajournalist</a> <a href="https://t.co/FTEG1OGajk">pic.twitter.com/FTEG1OGajk</a></p>&mdash; People&#39;s Watch (@peopleswatch) <a href="https://twitter.com/peopleswatch/status/1560275738053738498?ref_src=twsrc%5Etfw">August 18, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர் என்றும், அப்போதைய ஆட்சியர் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் என்றும், எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார் எனவும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com