திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் உட்பட 3 பேர் கைது

திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் உட்பட 3 பேர் கைது
திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் உட்பட 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய மருத்துவமனை ஊழியர் மற்றும் கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, இவர், அரசு மருத்துவமனையில் கட்டு போடும் ஊழியராக பணி செய்து வருகிறார் இவரது மனைவி அம்சலேகா இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இரண்டரை வயதில் நெகில் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த அம்சலேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார், உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே எனது மகள் அம்சலேகா உடம்பில் காயங்கள் இருப்பதால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது சம்பந்தமாக அம்சலேகாவின் கணவன் பாபு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாபு அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்னுடன் கள்ளத்தொடர் வைத்திருந்ததாகவும் அதை எனது மனைவி அம்சலேகா கைவிடுமாறு என்னிடம் தினமும் இரவு நேரத்தில் சண்டையிட்டு வந்தததாகவும் தொடர்ந்து கள்ளத்தொடர்பை பாபு கைவிட மறுத்ததால் அம்சலேகா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீடான குன்னத்தூர் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

நான் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன், மகாலஷ்மியுடன் உள்ள தொடர்பை நிறுத்திக் கொள்கிறேன் என உறுதியளித்து அம்சலேகாவை பாபு வீட்டுக்கு அழைத்துள்ளார். கணவரின் பேச்சை நம்பி கடந்த 10 நாளுக்கு முன்பு அம்சலேகா பா.கிள்ளனூர் கிராமத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள உனது கணவர் மகாலட்சுமியுடன் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதாகவும், அம்சலேகா தாய்வீட்டிற்குச் சென்றிருந்தபோது இருவரும் அடிக்கடி சந்தித்ததாகவும் அவரிடம் கூறியதை அடுத்து, அம்சலேகா தனது கணவர் பாபுவுடன் வழக்கம்போல் சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று மது போதையில் வந்த பாபுவிடம் கள்ளத் தொடர்பை கைவிடுமாறு அம்சலேகா சண்டையிட்டுள்ளார் ஒரு கட்டத்தில் மது போதையில் இருந்த பாபு ஆத்திரத்தில் மனைவி அம்சலேகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த அம்சலேகாவை பாபு மற்றும் அவனது அக்கா கணவர் ரவி கார்த்திக் என்பவரும் கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்பு கள்ளக்காதலி மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் ராஜீவ் காந்தியையும் உதவிக்கு அழைத்து வந்து நால்வரும் சேர்ந்து கொலை செய்யப்பட்ட அம்சலேகாவின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் அவரது புடவையால் தூக்கு மாட்டிவிட்டு ஒன்றும் தெரியாதபோல் வீட்டிற்கு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பாபு, ராஜீவ் காந்தி, மகாலட்சுமி ஆகிய மூவரையும் திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். .மேலும் இந்த வழக்கில் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான ரவி கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com