திருப்பதியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பதியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை காவலர்கள் திருப்பதி வனப்பகுதியில் இன்று‌ கண்கா‌‌ணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவாரிமெட்டு‌ மலைப்பாதை அருகேயுள்‌ள அடர் வனப்பகுதியில் செம்‌மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சுற்றிவளைக்‌க‌ முயன்றுள்ளனர். காவலர்களை கண்ட  கடத்தல்காரர்கள் அவர்கள் மீது கற்களைவீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் தாக்கியதில் கா‌வலர் ஹரிகிருஷ்ணாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, காவல்துறையி‌னர் வானத்தை‌ நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து செம்மரக்கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அவர்கள், விட்டுச்சென்ற 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com