ஆம்பூர்: விவசாயிக்கு சொந்தமான பூட்டிய வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள்!

ஆம்பூர் அருகில் பூட்டிய வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த செம்மரகட்டைகளை கைப்பற்ற வனத்துறையினரும், வருவாய்துறையினரும் முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்து கொல்லக்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டில் அதிகமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்படிருந்ததாக ஆம்பூர் வனத்துறையினருக்கு செய்தி வந்தது. இதனையடுத்து, வருவாய்துறையினருடன் இணைந்து அவர்கள் செம்மரக்கட்டையை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com