சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் அடித்துக் கொலை!

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் அடித்துக் கொலை!

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் அடித்துக் கொலை!
Published on

பாலியல் வன்கொடுமை செய்தவரை, கிராமத்தினர் கட்டி வைத்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நிஜாமபாத்தில் உள்ள டோங்கேஸ்வரைச் சேர்ந்தவர் மேதாரி சாயன்னா (50). மூன்று திருமணங்கள் செய்தவர். இவரது மோசமான நடத்தை காரணமாக மூன்று பேரும் இவரிடமிருந்து விவகாரத்து பெற்றுவிட்டனர். இதையடுத் து தனியாக வசித்து வந்தார். இவர், கடந்த சனிக்கிழமை ஏழு வயது சிறுமையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதைக் கண்ட சிறுமியின் பெற்றோர், கிராமத்தினரிடம் தெரிவித்தனர். கோபமாகச் சென்ற அவர்கள், சாயன்னாவை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் சரமாரியாக அடித்துத் தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நந்தியாபேட் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசார், சாயன்னாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனா ல், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com