தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராமநாதபுரம் ரவுடி; முன்பகை காரணமா?

தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராமநாதபுரம் ரவுடி; முன்பகை காரணமா?
தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராமநாதபுரம் ரவுடி; முன்பகை காரணமா?

திருவாடனை அருகே செங்கமடை வயல் காட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியின் தலை மற்றும் உடல் தனித்தனியாக கிடந்ததை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடையச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற பிரபல ரவுடி மீது மூன்று கொலை வழக்குகளும் பல்வேறு கொள்ளை வழக்குகளும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு முதல் முத்துப்பாண்டியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செங்கமடை அருகே வயல்காட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் தலை துண்டிக்கப்பட்டு தலை தனியாகவும் உடல் தனியாகவும் கிடப்பதாக திருவாடானை போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவாடானை டிஎஸ்பி நிரிஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றினர்.

தொடர்ந்து, ரவுடி முத்துப்பாண்டி முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு அரசியல் பின்புலம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் வயல்காட்டு பகுதியில் தலையும் உடலும் தனித் தனியாக ரவுடி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com