பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவலில் சிறை

பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவலில் சிறை
பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவலில் சிறை

பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதாகவும் நேற்றைய தினம் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில், பலமுறை இவரின் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, புகார்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ச்சியான அழுத்தங்களை தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு 12, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 354(ஏ)- பாலியல் தொல்லை கொடுத்தல், 509- பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கில் சொல் அல்லது செயலில் ஈடுபடுதல், தகவல் தொழில் நுட்ப சட்டபிரிவுகள் 67, 67(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் நங்கநல்லூரில் உள்ள வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்திய போது வாட்ஸ்அப் மெசேஜ்களை ராஜகோபாலன் Delete செய்து இருப்பது தெரிந்தது. அதனை சைபர் கிரைம் ஆய்வகம் மூலம் recovery செய்து அதனை வைத்து ராஜகோபாலனிடம் விடிய விடிய காவல்துறை விசாரணை நடத்தினர்.

அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். பிறகு ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு கைதான ராஜகோபாலனை காவல்துறை அழைத்து சென்று கொரோனா பரிசோதனை எடுத்தனர். இதையடுத்து இன்று காலை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கைதான ராஐகோபாலனை வருகிற ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜகோபாலனை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகு புழல் சிறைக்கு மாற்ற காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 8 ம் தேதிக்குப் பிறகு, ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com