புதுக்கோட்டை : நுங்கு வெட்டுவதில் தகராறு : ஒருவர் கொலை

புதுக்கோட்டை : நுங்கு வெட்டுவதில் தகராறு : ஒருவர் கொலை

புதுக்கோட்டை : நுங்கு வெட்டுவதில் தகராறு : ஒருவர் கொலை

புதுக்கோட்டை அருகே நுங்கு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கடகுளம் அடுத்துள்ள வளச்சேரிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேங்கிடகுளத்தை சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், இது எங்கள் இடத்திலுள்ள பனைமரம், இதில் நுங்கு வெட்டக் கூடாது என்று தடுத்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆக மாறியது . இதில் ஐந்து பேரும் சேர்ந்து பாண்டியனை தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாண்டியன் மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து பாண்டியனின் உறவினர்கள் அவரை மீட்டு வெண்ணாவல் குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்போது, பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென்று பாண்டியனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் பாண்டியன் கொலைக்கு காரணமான ஜெகதீசன் என்பவரை கைது செய்தனர் . மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com