கடைமுன் சிகரெட் பிடித்ததால் தகராறு : உரிமையாளரை கத்தியால் தாக்கிய இளைஞர்கள்..!

கடைமுன் சிகரெட் பிடித்ததால் தகராறு : உரிமையாளரை கத்தியால் தாக்கிய இளைஞர்கள்..!
கடைமுன் சிகரெட் பிடித்ததால் தகராறு : உரிமையாளரை கத்தியால் தாக்கிய இளைஞர்கள்..!

புதுச்சேரியில் கடைமுன் சிகரெட் பிடித்ததை கேட்டதால் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (58). இவர் தனது அண்ணன் திருஞானத்துடன் சேர்ந்து திருக்கனூர் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடை முன்பு 3 இளைஞர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தனர். கடை முன்பு சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அந்த இளைஞர்களிடம் உமாபதி தெரிவித்திருக்கிறார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த 3 இளைஞர்களும், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கடை உரிமையாளர் உமாபதியை தாக்கினர். அதை தடுக்க வந்த திருஞானத்தையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீசாரிடம் உமாபதி புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து பார்த்தனர். அதில் இளைஞர்கள் உமாபதி மற்றும் திருஞானத்தை தாக்கிய காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் தற்போது தப்பி ஓடிய 3 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com