அம்மாவின் தலையுடன் சரணடைந்த வாலிபர்!

அம்மாவின் தலையுடன் சரணடைந்த வாலிபர்!
அம்மாவின் தலையுடன் சரணடைந்த வாலிபர்!

புதுக்கோட்டையில் தாயை கொலை செய்த மகன் அவரது தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மறவம்பட்டியை சேர்ந்த தங்கராசுவின் மனைவி ராணி. தங்கராசு கடந்த 10ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராணி மீது சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் ராணி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் ராணிக்கும் அவரது மூத்த மகன் ஆனந்திற்கும் சொத்து பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்ததாகத் தெரிகிறது. இன்று காலை ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த ஆனந்த், தாய் ராணியை கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். தாய் ராணியின் தலையுடன் கறம்பக்குடி காவல்நிலையம் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட மழையூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com