டீக்கடைக்குள் காரை ஏற்றி 2 பேர் கொலை

டீக்கடைக்குள் காரை ஏற்றி 2 பேர் கொலை

டீக்கடைக்குள் காரை ஏற்றி 2 பேர் கொலை
Published on

ஆண்டிபட்டி அருகே சொத்துப்பிரச்னையில் டீக்கடை உரிமையாளரையும் அவரது மகளையும் கார் ஏற்றிக்கொன்ற நபர் பிடிபட்டுள்ளார். 

தேனி மாவட்டம் ராமலிங்கபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் டீக்கடையில் இருந்தபோது டீக்கடைக்குள் ஓட்டிவந்து காரை ரமேஷ், செல்வராஜ் மற்றும் அவருடைய 9 வயது மகள் அபிராமியை கொலை செய்துவிட்டு தப்பியோடினார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல் துறையினர் ரமேஷை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சுற்றிதிருந்த ரமேஷை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com